31 May 2025
   
  • Home
  • ARTICLES
  • TRAVEL
  • HEALTH
  • Women
  • Children
  • Interviews
  • Event
  • Business
  • Arts
  • Culture
  • Others
    • Tamil
    • Jokes
    • Younger generation
    • Recipes
    • TIPS
  • ECONOMY
  • Dr Abdul Kalam Anniversary
Headline News
  • Legalne Kasyno Online w Polsce: Jak Grać Odpowiedzialnie? May 30, 2025
  • Plinko och Konst: Kreativa Spelplansdesigner May 30, 2025
  • تأثير الواجهات الصديقة للمستخدم على تجربة 1xbet May 30, 2025
  • ১xBet ডাউনলোড APK কি আপনার দেশে বৈধ? May 30, 2025
  • ১xbet-এর বাজার সম্প্রসারণ কৌশল বিশ্লেষণ May 30, 2025
  • home
  • ARTICLES
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)

February 3, 2019 onlinevoice 0 1697

 அட்டைப்படம்: சிங்கப்பூரின் தொழில்நுட்பம் மற்றும் தகவல் துறை அமைச்சர் திரு S.ஈஸ்வரன் அவர்களுடன், திரு: செளந்தர் ராஜன்

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) 1000 மணி நேரம் மக்கள் சேவைக்கு உறுதிமொழி

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) 1998 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக நிறுவப்பட்டது.  அவர்கள் தங்களின் 20 வது ஆண்டுவிழாவினை சிங்கப்பூரில் அமைந்துள்ள கல்ஷா மண்டபத்தில் ஜனவரி 6, 2019 ஆம் ஆண்டு அன்று மிகவும் விமரிசையாக 350 க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

AAA

அண்ணாமலைப் பல்கலை கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் உலகம் முழுவதிலும் உள்ள முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் நோக்கோடு தொடங்கப்பட்டு அன்றிலிருந்து இன்று வரை பல பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும்  சிங்கப்பூரில் உள்ள இப்பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் பல வகையிலும் மதிப்புடையவர்களாக, பணிபுரிபவர்களாக இருந்து வருகிறார்கள். இவர்கள் சிங்கப்பூருக்கு பொருளாதார நிலை, கலாசார நிலை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிலைகள் மேலும் பல்வேறு நிலைகளிலும் பங்காற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சிங்கப்பூரின் தொழில்நுட்பம் மற்றும் தகவல் துறை அமைச்சர் திரு S.ஈஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு  விழாவினை சிறப்பித்தார்கள். விழாவின் முக்கிய அங்கமாக அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கம், மக்கள் கழகத்துடன் இணைந்து வருடத்திற்கு 1000 மணி நேரம் மக்கள் சேவை புரிவதற்கு உறுதிமொழி ஏற்றுக்கொண்டது. பிறகு அமைச்சர் அவர்கள் மேடையில் உரையாற்றும் போது இச்சங்கம் மேலும் மூன்று வகைகளில் சமூகத்திற்கு பங்காற்றலாம் என்று ஆலோசனை வழங்கினார். முதலாவதாக இந்திய சங்கத்துடன் இணைந்து செயல்படுவது. இரண்டாவதாக இந்திய சமூகத்தைத் தாண்டி சிங்கப்பூர் சமூகத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவது. மூன்றாவதாக  மாறிவரும் தொழில்நுட்பமாற்றங்களுக்கு ஏற்ப இளைஞர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் தொழில்நுட்ப ஆற்றல்களை கற்றுக்கொடுப்பது. இந்த தளங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் ஓர் சமூகமாக முன்னேறலாம் என்று உரையாற்றினார்.

அமைச்சர் திரு S.ஈஸ்வரன் அவர்கள் விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு அவர்களின் பல விதமான கேள்விகளுக்கு நேரிடையாக விளக்கமான பதில்களையும் அளித்தார்.

இதன் அடுத்த அங்கமாக குடும்பவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் முருகேசன் அவர்கள் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்தார்கள். மற்றுமொரு சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் புக்கிட் பஞ்சாங் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் திருவாளர். தியோ ஹோ பின் அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் வருகை தந்து இவ்விழாவினை மறக்க இயலாத ஓர் உன்னத நாளாக மகிழ்ந்து கொண்டாடினார்கள்.

 

படங்களும், தகவலும்:  அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)

 

 

SHARE THIS ARTICLE :
Tweet

ABOUT THE AUTHOR

  • ABOUT ME
  • OTHER ARTICLES

Thisaivegam- Festival of Tamil Dramas 2018

August 2, 2018 onlinevoice 0

Mostbet Br: Cassino Online Electronic Empresa De Apostas No Brasil

March 20, 2025 onlinevoice 0

Ставки На Спорт Онлайн Букмекерские Ставки на Футбол На следующий Прогнозы На Спорт Сделать Live Ставку На Спорт на Сайте Б

March 31, 2024 onlinevoice 0

Login Mostbet Guia

March 3, 2025 onlinevoice 0
PREVIOUS

Tamil Isai -An Overview

NEXT

An experience of the Harvest Festival in the Modern Singapore

RELATED POST

The ups and downs of Tamil Nadu’s growth

April 12, 2017 onlinevoice 0

Work Life Balance

October 10, 2015 onlinevoice 0

SINDA’s Subsidy revision

July 5, 2018 onlinevoice 0

A meaningful mission

August 2, 2018 onlinevoice 0

No Comment

Leave a reply Cancel reply

You must be logged in to post a comment.

Profile

Mrs. Soundaranayaki Vairavan


She has a Bachelors in Arts Degree in History with Ethiraj College, Madras University,Diploma in Freelance Journalism with International Correspondence School and Masters in Communication Management with University of South Australia. Read More

Editors desk



Online Voice is a 17 years old now! Special Thanks to all the readers who have made it possible. Now I reckon how a magazine can make your life full of chance encounters! Over these seventeen years, my experience has grown manifold.Read More

Contact



Email: vairavan@singnet.com.sg
Copyright 2015 | Online Voice | All Rights Reserved | Powered by Raga Designers